தமிழ்ப் புத்தாண்டு

சனிக்கிழமை ஏப்ரல் 20ஆம் தேதி, ஜூரோங் குழும சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுக்கள் ஏற்பாடு செய்த ‘சித்திரை வானவில்’ கொண்டாட்டங்கள், மாலை 5.30 முதல் 9 மணி வரை கிளமெண்டி சமூக மன்றத்தில் நடைபெற்றன.
தமிழும் இசையும், கவிஞர்களும் கானமும் என்ற பெயரில் லிஷா எனும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கம் சித்திரைப் புத்தாண்டு அன்று ஒரு கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
சித்திரை மாதத்தின் முதல் நாளான ஏப்ரல் 14ஆம் தேதியன்று தமிழர்களால் உலகமெங்கும் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. வசந்த காலத்தின் தொடக்கம் இந்தாண்டு ஞாயிற்றுக்கிழமை அமைந்ததால் லிட்டில் இந்தியாவில் வழக்கத்துக்கு மாறாக மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
பருவங்கள் மாறி மாறி வருகையில் ஏதோ ஓர் இடத்தில் தொடங்கி மறுபடியும் அவ்விடத்தையே அடைகிறது என்பதைக் கண்கூடாக அறிய முடிகிறது. தொடக்கமென்பது ஒரு மறுமலர்ச்சியை, புத்துணர்வை, மகிழ்ச்சியைக் கொடுக்ககூடியதாக அமைவதையே மனம் விரும்புகிறது. குளிர்காலம் முடிந்து, தாவரங்கள் துளிர்க்கும் காலம், மலர்கள் பூக்கும் காலம், ஆதவனின் கதிர்கள் பூமிக்கு இதமான வெப்பத்தைப் பரப்பும் காலம் இளவேனிற்காலம். அதுவே தொடக்கமெனப் பல்லாண்டு காலமாய் மனத்தில் தோன்ற சித்திரையே முதல் மாதமானது. நம் கலாசாரத்திற்குத் தெரிந்தது இம்மாதங்கள்தாம். இதனைத் தவிர்த்து, ராசிகளின் அடிப்படையில் மாத வரிசைகள் அமைவதும் உண்டு. அவையும் சித்திரை மாதத்தில்தான் தொடங்குகின்றன.